"ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி" - தேவசம் போர்டு அறிவிப்பு

ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 3 தேதி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Update: 2021-10-28 14:19 GMT
ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 3 தேதி  சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம்  என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் நடை கடந்த 16 தேதி மாலை திறக்கப்பட்டது. கடந்த 16 தேதி முதல் கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் பம்பையில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வருகின்ற 3 ஆம் தேதி  சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு  வரும் பக்தா்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தேவசம் போர்டு கூறியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்