நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம் - பல்லக்கில் பவனி வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2021-10-11 10:13 GMT
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும் வீதி உலா வந்தார். முன்னதாக ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடி வேத பண்டிதர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஆராதனை செய்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஜீயர்கள், அர்ச்சகர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்