சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - உணவகத்தில் நடந்த சம்பவம்

டெல்லியில், சேலை அணிந்து உணவகத்திற்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது

Update: 2021-09-23 13:33 GMT
டெல்லியில், சேலை அணிந்து உணவகத்திற்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம், விசாரித்து நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் நேரில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த குற்றச்சாட்டுக்கு உணவக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்