கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை - சுகாதார செயலர்களுடன் பேசிய ஹர்சவர்தன்

கொரோனா சிறப்பு மருத்துவமனைகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் மற்றும் இதர மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-04-17 16:29 GMT
கொரோனா சிறப்பு மருத்துவமனைகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் மற்றும் இதர மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில சுகாதார செயலாளர்களுடன் ஆலோசனை செய்த அவர், கொரோனாவுக்கு எதிரான போரில், மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்