அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

ஆந்திராவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-03-29 11:35 GMT
ஆந்திராவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சுங்காரப்பேட்டை அருகே இன்று காலை புகை மூட்டம் காரணமாக இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சாலையோரத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால், ஏற்பட்ட புகையின் காரணமாக விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.  மேலும், இந்த புகையால் லாரிகள், மூன்று அரசுப் பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது கண்டறியப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்