"வணக்கம் டா மாப்ள.." - நண்பன் வீட்டு காதணி விழா - பறந்து வந்த பாரீன் மாமன்கள்

Update: 2024-04-28 14:27 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, தன்னுடன் பணிபுரியும் நண்பர் வீட்டு காதணி விழாவிற்கு, அயல்நாட்டு நண்பர்கள், கடல் கடந்து வருகை தந்தனர். ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த ரவிபாரதி, இந்தோனேசியாவில் ஒரு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன்களுக்கு தனது கிராமத்தில் உள்ள கோவிலில் மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தினார். அந்த விழாவிற்கு இந்தோனேசியா மற்றும் சிங்கபூரியில் தன்னுடன் பணியாற்றும் நண்பர்களுக்கு காதணி விழா பத்திரிக்கை அனுப்பி வைத்தார். அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கடல் கடந்து, ஆயக்காரன்புலம் கிராமத்திற்கு வருகை தந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த நண்பர்களை ரவிபாரதி, அலங்கார வண்டியில் ஏற்றி மாலை மரியாதையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்