இலவச மின்சாரம்; மாநில அரசின் பொறுப்பு - மத்திய அமைச்சர் என்.கே.சிங்

அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் வசிக்கும் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளதா?

Update: 2021-02-05 04:11 GMT
அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் வசிக்கும் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளதா? நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் எவை? தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும்  மின்சார சலுகை என்ன? என்று மக்களவையில் ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அமைச்சர் என்.கே.சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், மின்சாரம் வழங்குவது மாநில அரசின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மின்வசதி இல்லாத வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டம் 2017 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்