"கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை" - வைகோவிற்கு மத்திய அரசு பதில்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-02-04 11:47 GMT
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில், மதிமுக எம்பி வைகோ எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், இந்திய மீனவர்களின் 62 படகுகள் இலங்கை கடற்படையின் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கு தேவையான தூதரகம் மற்றும் சட்ட உதவிகளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்