கிசான் முறைகேடு விசாரணை நிலை என்ன? - எம்.பி.வில்சன் கேள்விக்கு அமைச்சகம் விளக்கம்

தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளான கிசான் முறைகேடு விவகாரத்தில், தற்போது வரை 64 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-09-23 10:02 GMT
கிசான் திட்ட முறைகேடு குறித்து, மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சகம், இந்த விஷயத்தில் மாநிலங்கள் விரிவான விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தின்13 மாவட்டங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சகம், முறைகேடுகள் நடைபெற்ற வங்கி கணக்குகளில் இருந்து இதுவரை 64 கோடி ரூபாய் மீட்கப்பட்டு மத்திய நிர்வாக கணக்கில் மீண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்