"தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா அறிகுறி உடன் வந்தால் அரசுக்கு தகவல் அளித்திட வேண்டும்" - புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தால் உடனே தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-19 02:50 GMT
கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தால் உடனே தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து 
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று வெளியிட்ட உத்தரவில், புதுச்சேரியில் 70 சதவீத கொரோனா இறப்புகள் தாமதமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவதால் தான் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, காய்ச்சல், தொடர் இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம்  உள்பட கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வந்தால் உடனே, அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்