நாள் பார்த்து சென்டிமென்ட்டை டச் செய்த ராகுல் காந்தி | Congress | Rahulgandhi

Update: 2024-05-01 09:14 GMT

தேசத்தை கட்டமைத்தவர்களுக்கு நாட்டின் வளங்களில் பங்கு வழங்க வேண்டும் என்பதே காங்கிரசின் தீர்மானம் என அக்கட்சியின் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மே தின வாழ்த்து செய்தியில், தொழிலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீதி உத்தரவாதங்கள், தேசத்தை கட்டமைத்தவர்களுக்கு ஆதரவற்ற நிலை என்ற கட்டுகளை தகர்த்தெறியும் என ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்