மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2020-08-04 12:41 GMT
ஆந்திர மாநிலம்,  விசாகப்பட்டினத்தை அடுத்த  அச்சுதாபுரத்தில், மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும் வெடி சத்தத்துடன் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தகவல் அறிந்து விரைந்த, விசாகப்பட்டினம் தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்