தங்க ராணி சொப்னா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை கலக்கிய தங்க ராணி சொப்னா சுரேஷ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-07-12 02:17 GMT
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை கலக்கிய தங்க ராணி சொப்னா சுரேஷ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், பெங்களூருவில் பதுங்கி இருந்த சொப்னா சுரேஷை கைது செய்தனர். அவருடன் அவரது உறவினர் சந்தீப் நாயர் மற்றும் அவருக்கு உதவியதாக மற்றொரு நபரையும் கைது செய்துள்ளனர். இவர்களை இன்று கொச்சி தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்