ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலை. சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை | Anna University | Drone

Update: 2024-04-29 05:28 GMT

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த விதமான ட்ரோன்களும் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்