கஞ்சாவுடன் சேரும் தீரா வன்மம்...அடுத்தடுத்து நிகழ்த்தும் பயங்கரம் - நடுங்கும் ராஜபாளையம்..

Update: 2024-04-29 04:33 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.ராஜபாளையம் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் கீழ் செயல்படும் அரசு டாஸ்மாக்கின் ஊழியரான இவர், கள்ளச் சந்தையில் மது விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதில், அதே பகுதியை சேர்ந்த சிலரும் கள்ளச் சந்தையில் மது விற்று வந்ததால், அவர்களுடன் சரவணனுக்கு போட்டி ஏற்பட்டு தகராறாகி இருக்கிறது. பார் ஊழியராக பணியாற்றுவதால், இந்த வியாபாரம் மூலம் சரவணன் அதிகளவில் வருவாய் ஈட்டுவதாக கூறி ஆத்திரத்தில் இருந்த கும்பல், சரவணனை கஞ்சா போதையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ராஜபாளையத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகமாகியிருப்பதாகவும்... முதுகுடியில், இளைஞர் ஒருவரை சாதிப் பிரச்சினையில் கும்பல் கஞ்சா போதையில் கொலை செய்ய முயன்றதும், முகநூலில் பழகி வந்த பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அவரை மதுபோதையில் இளைஞர் வீடு புகுந்து மண்ணெய் ஊற்றி கொல்ல முயன்றதுமான சம்பவத்தை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள்.. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்