பாஜகவினரை வெறிகொண்டு தாக்கிய கும்பல்.. - மே.வங்கத்தில் அதிர்ச்சி

Update: 2024-04-29 05:25 GMT

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, பாஜகவினர், மட்டிகாரா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய அவர்கள், தாங்கள் வாக்குப்பதிவு முடிந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது, அங்கு வந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு வேலை செய்வதற்காக தங்களை அவதூறாக பேசியதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிராம தலைவர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து தங்கள் வீடுகளுக்கு வந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், தாக்குதல் நடத்தியதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்