"மாங்கனி திருவிழாவை எளிய முறையில் நடத்த ஏற்பாடு" - புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா, பக்தர்கள் இன்றி 5 நாட்கள் எளிய முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-24 02:27 GMT
காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா, பக்தர்கள் இன்றி 5 நாட்கள் எளிய முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்