"இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு" : உத்தரப்பிரதேச காவல்துறை அதிரடி

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக செல்லும் பெண்கள் உதவி கோரினால், பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-12-10 09:59 GMT
காவல்துறை ரோந்து வாகனத்தில் பணியில் உள்ள பெண் காவலர்களுக்கு தேவையான பயிற்சி, அறிவுரைகளை வழங்கவும், அவர் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் பத்து சதவீதம் வாகனங்களை பெண் காவலர்களுக்கு ஒதுக்கவும் அறிவுறுத்தி உள்ளார். 112 என்ற எண்ணுக்கு அழைத்து இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரப்பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்