இரவில் வீட்டின் வெளியே தூக்கிய பெண் -காலையில் கருகிய நிலையில் கிடந்த அதிர்ச்சி -பீதியில் மக்கள்

Update: 2024-05-04 13:42 GMT

திருவள்ளூர் அருகே, 50 வயது பெண் வீட்டின் அருகே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கற்பகம் என்பவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் வெளியே தூங்கிய நிலையில், அதிகாலை வேளையில் வீட்டின் அருகே உள்ள குட்டையின் ஓரத்தில், தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்