"உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : "சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" - கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் கோரிக்கை
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்ப்பட்ட முக்கிய நபரின் சகோதரி ஒருவர், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். உன்னாவ் பாலியல் வழக்கில், தனது தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தாய் கிராம பஞ்சாயத்து தலைவியாக இருப்பதால், இதில் அரசியல் தலையீடு இருக்கலாம் என தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.