ரவுடிகள் பட்டியலை தயாரிக்க போலீசாருக்கு உதவலாம் - கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-09-29 23:10 GMT
புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள், மிரட்டி பணம் பறிப்போர் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை 1031 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்களும்  தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகையிலும்,  டிஜிபி  குறைதீர் கூட்டத்திலும் நேரில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.  குற்றவாளிகளின் கடந்த காலம், தற்போதைய நடவடிக்கைள், வாழ்க்கை ஆதார விவரங்கள் ஆகிய தகவல்களை பராமரிக்க வேண்டும்  என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்