கேரளாவில் இதுவரை கனமழைக்கு 57 பேர் உயிரிழப்பு - பினராயி விஜயன்

கேரளாவில் இதுவரை கனமழைக்கு 57 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-11 02:24 GMT
கேரளாவில் இதுவரை கனமழைக்கு 57 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளா முழுவதும் ஆயிரத்து 138 முகாம்கள் அமைக்கப்பட்டு, ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 519 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கண்ணூர், காசர்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்