வெப்பம் காரணமாக இந்த ஆண்டு 210 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்

இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

Update: 2019-07-12 12:56 GMT
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், இதில் அதிகபட்சமாக பிகாரில் 118 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், தெலங்கானாவில் 41 பேரும், ஆந்திராவில் 28 பேரும், குஜராத்தில் 8 பேரும், தமிழகம் மற்றும் கேரளாவில் தலா ஒருவர் உள்பட மொத்தம் 210 பேர் வெப்பம் காரணமாக நாடு முழுக்க உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்