கேரளாவில் வருகிற 13 ஆம் தேதி பூரம் திருவிழா

கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவில் தெச்சிக்கோடுகாவு யானை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-05-11 18:48 GMT
உலக புகழ்பெற்ற, கேரள மாநிலம் திருச்சூர் பூரம்,  வருகிற 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்க, 13 பேர் பலியானதற்கு காரணமான தெச்சிக்கோடுகாவு யானைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களும், யானை உரிமையாளர்களும், அதனை பங்கேற்க செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றம் வரை சென்ற பின், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, பூரம் திருவிழாவில் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் பங்கேற்க அந்த யானைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்