ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம் : வேலை இழந்தவர்களை பணியமர்த்தும் ஸ்பைஸ்ஜெட்

நிதிநெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளன.

Update: 2019-04-20 12:19 GMT
நிதிநெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளன. இதனால்  வேலை இழந்துள்ள பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய்சிங் கூறுகையில், ஏற்கெனவே 100 பைலட்கள், 200 விமான பணியாளர்கள், 200 விமான நிலைய பணியாளர்களை வேலைக்கு எடுத்துள்ள நிலையில், மேலும் பலருக்கும் வேலை அளிக்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சேவைகளை நிறுத்தியதால் ஆயிரத்து 300 பைலட்டுகள் உள்பட 22 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்