ரஃபேல் போர் விமானங்களின் விலை 41 % உயர்வு - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட போது இருந்ததை விட பாஜக ஆட்சியில் வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானங்களின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-01-18 12:28 GMT
காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட போது இருந்ததை விட பாஜக ஆட்சியில் வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானங்களின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான 
செய்தியை சுட்டிக்காட்டியுள்ள அவர், ரஃபேல் விமான விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு முன்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். ரஃபேல் ஊழல் தொடர்பாக தற்போது தடயங்கள் இல்லை என்றாலும், விரைவில் அவை முழுமையாக வெளிவரும் எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்