கர்நாடகாவின் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

Update: 2018-11-06 04:47 GMT
கர்நாடகாவில் காலியாக உள்ள பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. ஷிமோகா மக்களவை தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது. பெல்லாரி மற்றும் மாண்டியா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் ராம்நகர், ஜமகண்டி சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி முன்னிலையில் உள்ளது. இன்று நண்பகலுக்குள் கட்சிகளின் வெற்றி நிலவரங்கள் ஓரளவுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்