கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்

கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.

Update: 2018-08-14 03:14 GMT
கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, அங்குள்ள 27 அணைகளில் இருந்தும் நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரங்களில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு, கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது. 

இதனையடுத்து, வீடுகளில் தேங்கிய சகதியை, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான இப்பகுதியில் 300 குடும்பங்களுக்கு 3 டன் அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்