ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

Update: 2018-07-25 12:45 GMT
        ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.  
       இந்த வழக்கு நீதிபதி  பாதக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,அமலாக்கதுறை சார்பில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபடி, வழக்கை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அது வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்