"மோடி விஷம் மட்டுமே இருக்கிறது" - ஜெய்ராம் ரமேஷ் சாடல் | Pm Modi

Update: 2024-04-27 08:29 GMT

நாடு முழுவதும் பிரதமர் மோடி விஷத்தையே தெளிக்கிறார் என காங்கிரஸ் கடுமையாக தாக்கியுள்ளது..வடமாநில பிரசாரங்களில் பாஜக- காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. பீகார் மாநிலம் அராரியாவில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளங்கள் மீதான முதல் உரிமை மத வேறுபாடு இல்லாமல் நாட்டியிலிருக்கும் ஏழைகளுக்கே என்றார். காங்கிரஸ் தனது வாக்கு வங்கிக்காக இந்துக்களுக்கு எதிராக எப்படி பாரபட்சமாக இருந்தது என்பது அம்பலமாகிவிட்டது என குற்றம் சாட்டினார். ஊழலால் நாட்டை கொள்ளையடித்த காங்கிரஸ் இப்போது மக்களின் சொத்துக்கள், தங்கங்களை குறிவைக்கிறது என காட்டமாக விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்த தேர்தலில் மோடி அலை இல்லை, மோடி விஷம் மட்டுமே இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி, பரம்பரை சொத்து வரி குறித்து பொய் பிரசாரம் செய்கிறார் என்றும் பொய்யான வகுப்புவாத பேச்சுகளையும் பேசிவருகிறார் என கூறிய ஜெய்ராம் ரமேஷ், இதில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்