கோவத்தில் கண் சிவந்த யோகி... சொல்லிய ஒவ்வொரு சொல்லிலும் வீசிய அனல்

Update: 2024-04-27 08:39 GMT

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். அப்போது, சிறுபான்மையினருக்கு மாட்டிறைச்சியை சாப்பிடும் உரிமையை கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது, இதனுடைய பொருள் பசுவதையை அனுமதிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்பதாகும் என்றார். வேதங்கள் பசுவை தாய் என சொல்கிறது, அவர்களோ பசுவை கசாப்பு கடைக்காரர்களின் கைகளில் கொடுக்க விரும்புகிறார்கள், இதை இந்தியா ஏற்குமா..? என கேள்வியை எழுப்பினார். காங்கிரஸ் பெண்களின் தங்கம், செல்வங்களை எல்லாம் பறித்து, அதை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்