உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல்

Update: 2024-05-09 05:22 GMT

உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல்

கப்பல் கட்டுமானத்திற்கு தேவையான மெரைன் கிரேட் ஸ்டீலை உற்பத்தி செய்ய, ஜிண்டால் ஸ்டீல் அன்ட் பவர் நிறுவனத்துடன் இந்திய கடலோரக் காவல்ப் படை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை திங்கள் அன்று செய்துள்ளது. இதன் மூலம் கப்பல் கட்டுமானத்திற்கு தேவையான மூலப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யவது அதிகரித்து, தேசிய நலன்களுக்கு நன்மை ஏற்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. பாதுகாப்புத் துறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சுட்டிக்காட்டுவதாக கூறியுள்ளது. அதிக தரம் வாய்ந்த மெரைன் கிரேட் ஸ்டீல் பொருட்களை, தேவையான

அளவுக்கு உற்பத்தி செய்து, உரிய நேரத்தில் கப்பல் கட்டுமான

மையங்களுக்கு அளிக்க இது வகை செய்வதாக கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்