நடிகர் தனுஷுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
நடிகர் தனுஷை தங்களது மகன் என கூறும் மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.