பேருந்தில் இடம் பிடிக்க தகராறு.. கிரிக்கெட் மட்டையால் அடித்து கொடூரம்.. முன்விரோதத்தை முடிக்க நினைத்த இளைஞர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-04-25 14:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் கோரமங்கலம் காலனியை சேர்ந்தவர் குமார். இவரும் செருக்கனூர் காலனியை சேர்ந்த விமல்ராஜூம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். தினமும் வேலைக்கு செல்லும்போது, தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தில் இடம் பிடிப்பதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முன்விரோதத்தில் இரு காலனியை சேர்ந்த இளைஞர்களும் ஏற்கனவே மோதிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கோரமங்கலம் காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனியே சென்று கொண்டிருந்த நிலையில், அவரை கடத்தி கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து வந்த செருக்கனூர் காலனி இளைஞர்கள், சிறுவனை கண்மூடித்தனமாக கிரிக்கெட் மட்டையால் தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்