தனியார் வாகனம் கவிழ்ந்து விபத்து..15மாணவர்களுக்கு நேர்ந்த கதி..வலியால் அலறி துடித்த பள்ளி மாணவர்கள்

Update: 2023-10-19 11:39 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, தனியார் வாகனம் கவிழ்ந்ததில், 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். கருங்காலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால், தனியார் வாகனத்தில் உதவி கேட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறிது தூரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், உடனடியாக மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்