கணவனுக்கு வேலை கொடுத்த முதலாளியுடன் சேர்ந்து.. மனைவி நிகழ்த்திய பயங்கரம்

Update: 2022-10-12 11:44 GMT

கணவனுக்கு வேலை கொடுத்த முதலாளியுடன் சேர்ந்து.. மனைவி நிகழ்த்திய பயங்கரம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவியையும், அவருடைய கள்ளக் காதலன் உள்ளிட்ட மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளத்தை அடுத்த பூலாங்குளம் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வட்டாலூரைச் சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து விசாரித்து வந்த ஆலங்குளம் போலீசார், முத்துராமலிங்க ராஜனின் மனைவி உஷாவிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது கள்ளக்காதலனும், கணவர் வேலைபார்த்து வந்த இரும்புக் கடையின் முதலாளியுமான கடல்மணி என்வருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கடல்மணியை ஆலங்குளம் போலீசார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடியில் அவரை கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ராபின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்