தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் பக்தர்.. பொன்னியம்மன் கோயில் பரபரப்பு

Update: 2023-02-03 03:11 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில், அக்னி குண்டத்தில் பெண் பக்தர் ஒருவர் தவறி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

ஆலங்குப்பம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் திருவிழாவையொட்டி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

அப்போது பெண் பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் நடந்து வரும் போது, தவறி விழுந்து காயம் அடைந்தார். பின்னர், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

Tags:    

மேலும் செய்திகள்