"ஹேய்.. புட்ரா.. புட்ரா.. புட்ரா.." சூறைக்காற்றில் மாணவர்களோடு பறந்த பெஞ்ச் - 12 மணி நேரம்.. வேலூரில் கொட்டிய மழை

Update: 2023-06-10 03:49 GMT

வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

வேலூரில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சத்துவாச்சாரி, வள்ளலார், கிரீன் சர்க்கிள், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.

காட்பாடி, விஐடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், கல்லூரி விடுதியில் மேஜைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழை காரணமாக வேலூர், காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்