"திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" - விசிக டிஜிபி அலுவலகத்தில் மனு

Update: 2022-09-30 16:50 GMT

"திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" - விசிக டிஜிபி அலுவலகத்தில் மனு

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க கோரி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊர்வலம் காரணமாக தான், ஆர்எஸ்எஸின் ஊர்வலம் மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில், திருமாவளவனுக்கு ஏராளமான மிரட்டல்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்த்திபன், டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். ஆறு பேர் கொண்ட தனிப்படை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்