சிதைந்த வெற்றி கனவு... தேசிய சைக்கிள் போட்டி... பதக்கம் வெல்ல சென்ற சிறுமி சடலமாக திரும்பிய சோகம்

Update: 2022-12-24 15:54 GMT

தேசிய சைக்கிள் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற 10 வயது சிறுமி, உயிரிழந்து சடலமாக சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாக்பூரில் நாளை நடைபெறும் தேசிய சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த பாத்திமா நிதி என்ற 10 வயது சிறுமி சென்றிருந்தார். அங்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார். தவறான சிகிச்சையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த சூழலில், நாக்பூரில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சிறுமியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்