சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் - மாயமான மக்கள்

Update: 2022-11-23 08:01 GMT

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இந்தோனேசிய குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்... இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமான குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்