கால்வாயில் குளிக்க சென்ற பள்ளி மாணவன்... சடலமாக மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் - சென்னையில் சோகம்

Update: 2023-01-03 10:10 GMT

ஆவடி அருகே, கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவனின் உடலை, தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மோரை பகுதியைச் சேர்ந்தவர் திரிஷன். பள்ளி மாணவரான இவர், விடுமுறை நாளையொட்டு, அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்துள்ளார். இதனிடையே, அவர் திடீரென வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின், பள்ளி மாணவனை சடலமாக மீட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்