"இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுவோம்" - இலங்கை மீனவ சங்கம் அறிவிப்பு

காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரண்யம் மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வருவதை தமிழக முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை மீனவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-09-06 03:31 GMT
 யாழ்ப்பாணத்தில் மீனவ சங்க தலைவர்கள் அன்ன ராசா, வர்ணகுலசிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி வந்து கடல் வளத்தை அழிப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்