தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 98% பாதுகாப்பு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-23 10:56 GMT
உருமாறிய கொரோனா வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தாங்கள் அறிவியலைப் பின்பற்றுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசியை செலுத்தாதவர்களுக்கு மட்டுமே கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எனவும், தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் 98 சதவீதம் கொரோனா வைரஸ் தாக்காது என்றும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசியானது டெல்டா வகை உட்பட அனைத்து உருமாறிய கொரோனா வகைகளுக்கும் எதிராகப் போராடும் தன்மை கொண்டது என்றும் அவர் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்