நாள் போக்கில் கசந்த காதல்...123 நாட்களுக்குப் பிறகு கைவிலங்கு உடைப்பு..."ஆள விடுங்கடா சாமி" என்று தப்பியோட்டம்!

உக்ரைனைச் சேர்ந்த காதல் ஜோடி, காதல் மிகுதியால் இருவரையும் சேர்த்து கைவிலங்கிட்டுக் கொண்ட நிலையில், 123 நாட்களில் காதல் கசந்து பிரிந்து விட்டனர்.

Update: 2021-06-21 08:31 GMT
உக்ரைனைச் சேர்ந்த காதல் ஜோடி, காதல் மிகுதியால் இருவரையும் சேர்த்து கைவிலங்கிட்டுக் கொண்ட நிலையில், 123 நாட்களில் காதல் கசந்து பிரிந்து விட்டனர். 29 வயதான விக்டோரியாவும், 33 வயதான அலெக்சாண்டரும், ஒரு கணமும் பிரியக்கூடாது என்றெண்ணி, காதலர் தினத்தன்று கைவிலங்கிட்டுக் கொண்டனர். 24 மணி நேரமும் இணைபிரியாது இருந்த ஜோடி, நாட்கள் செல்லச் செல்ல காதல் கசந்து, இதற்கு மேல் முடியாது என்ற நிலையில், 123 நாட்களுக்குப் பிறகு கைவிலங்கை உடைக்க முடிவு செய்தனர். கைவிலங்கு உடைக்கப்பட்ட அடுத்த நிமிடமே காதல் பறவைகள் இரண்டும் "ஆள விடுங்கடா சாமி" என்று தனித்தனி பாதைகளில் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்