"ஜனவரி மாத இறுதிவரை வெளிநாட்டினர் வர தடை" - புதிய கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பான் அரசு அதிரடி

ஜப்பான் நாட்டில் நாளை முதல், ஜனவரி மாத இறுதி வரை வெளிநாட்டினர் வருவதற்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Update: 2020-12-27 06:37 GMT
ஜப்பான் நாட்டில் நாளை முதல், ஜனவரி மாத இறுதி வரை வெளிநாட்டினர் வருவதற்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய ஐந்து பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும், டோக்கியோ நகரிலும் புதிய கொரோனா தொற்று சிலருக்கு உறுதியானதை அடுத்து, ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்