பயங்கரவாதி சஜித் மீர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 37 கோடி சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஜித் மீர் குறித்து தகவல் தெரிவித்தால் 37 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

Update: 2020-11-28 06:49 GMT
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஜித் மீர் குறித்து தகவல் தெரிவித்தால் 37 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சஜீத் மீர், மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. மேலும், 2011-ம் ஆண்டே சஜித்துக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்றும் 2019-ம் ஆணடு அவருடைய பெயர் எப்.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டது என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்