நபிகள் நாயகம் குறித்த கேலி சித்திரம் - மாணவர்களுக்கு காட்டிய ஆசிரியர் கொலை

பிரான்சில் தலை துண்டித்து கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியருக்கு, பொதுமக்களும், மாணவர்களும், மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Update: 2020-10-17 12:47 GMT
பிரான்சில் தலை துண்டித்து கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியருக்கு, பொதுமக்களும், மாணவர்களும், மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்