சமூக இடைவெளியுடன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி - தனித்தனி இருக்கைகளோடு அரங்கம் அமைப்பு

சமூக இடைவெளியுடன் இங்கிலாந்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-08-14 06:13 GMT
சமூக இடைவெளியுடன் இங்கிலாந்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உலகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதன் முறையாக சமூக இடைவெளியோடு நியூகேஸில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தனித் தனியே இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அமர்ந்து ரசிகர்கள் இசையை ரசித்தனர். ரசிகர்கள் வரும் வாகனங்களையும் 2 மீட்டர் இடைவெளியில் நிறுத்தி வைக்கவும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்