சீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ் - இந்தியாவின் உதவியை ஏற்க மறுக்கிறதா சீனா?

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவிலும் கொரோனா வைர​​​ஸ் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-02-23 06:47 GMT
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது. 77 ஆயிரம் பேர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சீனாவை தொடர்ந்து தென்கொரியா, லெபனான், இஸ்ரேல் , ஈரான் உள்ளிட்ட 28 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 556 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவின் மருத்துவ உதவியை சீனா தள்ளிப்போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ பொருள்களுடன் இந்தியா விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆனால் இந்த விமானத்திற்கு அனுமதி தராமல் ​சீனா கால தாமதம் செய்து  வருவதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்